கொவிட் அச்சத்தினால் மேஜர் எமர்ஜிங் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

124

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்காக நடாத்தி வந்த கழக அணிகளின் மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடரினை மறு அறிவித்தல் வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்திருக்கின்றது.

NCC அணியை 38 ஓட்டங்களுக்கு சுருட்டிய கோல்ட்ஸ் கழகம்

கொவிட்-19 வைரஸ் அச்சம் நாட்டில் மீண்டும் தலை தூக்கியிருக்கும் நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமையவே, மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இள வயது வீரர்களின் திறமைகளை வெளிக்காட்ட மிகப் பெரிய வாய்ப்பு மேடை ஒன்றை உருவாக்கி கொடுத்த இந்த மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குழுநிலை லீக் ஆட்டங்கள் யாவும் தற்போது நிறைவடைந்திருக்கின்றன. 

இலங்கை விஜயம் செய்யும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

அந்தவகையில், இந்த மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஒக்டோபர் 07ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலையே, கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர் ஒத்திவைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<