இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வினை வழங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்திருக்கின்றது.
எனினும், தற்பொழுது நடைபெற்று வரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினை தொடர்ந்து கோஹ்லி தலைமை தாங்கி வழிநடாத்துவார்.
இலங்கைக்கு எதிராக இந்திய அணிக்கு மற்றொரு வரலாற்று வெற்றி
நாக்பூரின் VCA மைதானத்தில் இன்று (27) முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு….
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகும் போட்டியுடன் தொடங்குகின்றது. கோஹ்லிக்குப் பதிலாக ஒரு நாள் தொடரில் இந்திய அணியினை வழிநடாத்த ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை, சொந்த காரணங்களுக்காக இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடது போயிருந்த சிக்கர் தவான் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
விராத் கோஹ்லி (அணித் தலைவர்), முரளி விஜய், லோக்கேஷ் ராகுல், சிக்கர் தவான், செட்டெஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ரோஹித் சர்மா, ரித்திமன் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர்
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (அணித் தலைவர்), சிக்கர் தவான், அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மஹேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஸ்வர் குமார், சித்தார்த் கெளல்