லங்கா T10 தொடர் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

Lanka T10 2024

169
Lanka T10 2024

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இந்த ஆண்டு இறுதியில் லங்கா T10 தொடர் முதன்முறையாக நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா T10 தொடரை கடந்த ஆண்டு நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டிருந்த ஐசிசி தடையால் தொடர் நடைபெறவில்லை.

>>சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கும் இங்கிலாந்து வீரர்<<

எவ்வாறாயினும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் லங்கா T10 தொடரை நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ள லங்கா T10 தொடரில் மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், சர்வதேசத்தில் உள்ள முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒவ்வொரு அணிகளும் தலா 16 வீரர்களை அணியில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், இதில் 6 வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<