பொன்டேரா நிறுவனத்தால் 60 வீரர்களுக்கு ஊட்டச்சத்து பொதிகள்

133

இலங்கையில் தொழில்முறை வீரர்களை உருவாக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 60 வீர வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஊட்டச்சத்து பொதிகளை வழங்குவதற்கு பொன்டேரா ப்றாண்ட்ஸ் லங்கா நிறுவனம் (அன்கர்) முன்வந்துள்ளது. 

இதன்படி, 25 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து பொதிகள் உத்தியோகப்பூர்வமாக நேற்றைய தினம் (02) வீரர்களிடம் கையளிக்கப்பட்டது.

சர்வதேச மட்டத்தில் பதக்கம் வெல்லக்கூடிய தொழில்முறை வீரர்களை உருவாக்கும் நோக்கில் சகல விளையாட்டுக்களையும் உள்ளடக்கியதாக 60 வீர வீராங்கனைகள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

வீர வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஊட்டச்சத்து பொதிகள்

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் குறித்த வீரர்களின் பயிற்சிகளுக்காக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது

இந்த நிலையில், உயர் ஆற்றல் வெளிப்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்ட 60 வீர வீராங்கனைகளுக்கும் பொன்டேரா ப்றாண்ட்ஸ் லங்கா நிறுவனம் (அன்கர்) அனுசரணையில் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து பொதிகள் நேற்றைய தினம் உத்தயோகப்பூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது

இதன்படி, மெய்வல்லுனர், குத்துச்சண்டை, பளுதூக்கல், நீச்சல், குத்துச்சண்டை, ஜுடோ, பெட்மிண்டன், விசேட தேவைகள் கொண்ட பரா வீரர்கள் உள்ளிட்ட 7 விளையாட்டுக்களைச் சேர்ந்த 60 வீர வீராங்கனைகளுக்கு  ஊட்டச்சத்து பொதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்

விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது இலக்கு அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களில் இலங்கை வீரர்கள் பதக்கங்களை வெல்வதாகும்

இந்த வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பொன்டேரா நிறுவனம் சார்பில் தினித் பத்திரன, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…