சென்னை அணியில் இணையும் முன்னாள் மும்பை வீரர்

Indian Premier League 2021

156

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய ஜோஸ் ஹெஷல்வூட்டுக்கு பதிலாக, அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் இணைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியாக தயாராகும் முகமாக, ஜோஸ் ஹெஷல்வூட் IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதே காரணத்தக்காக அவுஸ்திரேலியாவின் ஜோஸ் பிலிப்பி மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் IPL தொடரிலிருந்து விலகினர்.

பல்வேறு காரணங்களால் 2021 IPL ஐ தவறவிட்ட வீரர்கள்

இந்தநிலையில், ஜோஸ் ஹெஷல்வூட்டுக்கு பதிலாக ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஜேசன் பெஹ்ரெண்டொர்ப் இதற்கு முன்னர் கடந்த 2019ஆம் ஆண்டு IPL தொடரில் அறிமுகமாகியிருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் 5 போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த நிலையில், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்காக இவர் 11 ஒருநாள் மற்றும் 7 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.

IPL தொடரின் இந்த பருவகாலத்தக்கான போட்டிகள் இன்றைய தினம் (9) ஆரம்பமாகவுள்ளன. சென்னையில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுவுள்ளன. அதேநேரம், சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியை நாளைய தினம் மும்பையில் வைத்து எதிர்கொள்ளவுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள IPL தொடரில் விளையாடும் அணிகள், தங்களுடைய சொந்த மண்ணில் போட்டிகளில் விளையாடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<