அன்டர்சனின் ஓய்வு அறிவிப்பை தள்ளிப்போட்ட கொரோனா

138
James Anderson

கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வை பயன்படுத்தி தன்னால் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும் என இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலையில்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவுள்ள

இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறது

இதன் முதல் கட்டமாக மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது

இதனிடையே சர்வதேசப் போட்டிகளுக்கு தயாராவதற்காக, 55 வீரர்களை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (.சி.பி) தேர்வு செய்து அறிவித்திருந்தது. இதில் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனும் இடம்பெற்றுள்ளார்.  

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் விலா எலும்பு உபாதை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் இருந்தார்.  

37 வயதான இவர் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வை அறிவிப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால், தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்த அண்டர்சன் அண்மையில் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில்

“தற்போது நான் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்துவிட்டேன். கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

இதனால், எனக்குக் கிடைத்துள்ள இந்த கூடுதல் ஓய்வைப் பயன்படுத்தி நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட எனது உடற் தகுதியை மேம்படுத்திக் கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.  

“நான் கிரிக்கெட் உலகிற்கு மீண்டும் திரும்பியிருப்பதை மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன். வலைப் பயிற்சியில் பந்துவீசும் போது அருகில் குறைவான நபர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இது இன்னும் என்னை நன்றாக உணர வைக்கிறது” என குறிப்பிட்டார்.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலையில்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவுள்ள மூன்று

“களத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடுவது துரதிஷ்டமான நிகழ்வு. பார்வையாளர்கள் எழுப்பும் சத்தம் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் குளிர்பானம் போல் இருக்கும்” என்று பார்வையாளர்கள் இன்றி விளையாடுவது குறித்து அண்டர்சன் தெரிவித்தார்.  

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 584 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவ வீரரான ஜேம்ஸ் அண்டர்சன், மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி சௌத்தம்ப்டனில் ஆரம்பமாகவுள்ளது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க