இலங்கை – பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணிகளுக்கு இடையில் நேற்று (30) நடைபெற்ற மூன்றாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 39 ஓட்டங்களால் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2–1 என பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி முன்னிலை பெற்றது.
மழை குறுக்கீடு காரணமாக 28 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதஷ் 19 வயதின்கீழ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை எடுத்தது.
இதில் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கீம் ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும், ஸவாத் அப்ரார் 38 ஓட்டங்களையும், ரிஸான் ஹொசன் ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
- 2ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் இளையோரிடம் வீழ்ந்தது இலங்கை
- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு முக்கோண தொடரில் முதல் தோல்வி
- முக்கோண ஒருநாள் தொடரின் சம்பியனாக இலங்கை A கிரிக்கெட் அணி
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை 19 வயதின்கீழ் அணிக்கு 198 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, அந்த இலக்கை துரத்திய இலங்கை அணி, 22 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, போதியளவு வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது, இலங்கை அணி வெற்றி பெற 159 ஓட்டங்களை எடுக்க வேண்டியிருந்தது.
இலங்கை அணி சார்பில் கவிஜ கமகே ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும், ரமிரு பெரேரா 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். அதே நேரத்தில் முதல் 5 துடுப்பாட்ட வீரர்களுக்கு 10 ஓட்டங்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை.
புங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் அல் பஹாத், அஸிஸுல் ஹக்கிம் ஆகிய இருவரும் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நாளை (02) கொழும்பு CCC மைதானத்தில் நடைபெறும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<