IPL இல் கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணி எது? பிரபல ஜோதிடர் கணிப்பு

1005
Astrologer tells who will win the IPL

தற்பொழுது விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் 10ஆவது ஐ.பி.எல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் எந்த அணி வெற்றி பெறும் அல்லது தோல்வியை தழுவும் என ரசிகர்களும் கணித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த ”கிரீன்ஸ்டோன் லோபோ” என்ற பிரபல ஜோதிடர் இந்த வருடம் எந்த அணி ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றும் என அறிவியல் பூர்வமாக எதிர்வு கூறியுள்ளார்.

ஐ.பி.எல். தொடர்பில் எதிர்வு கூறியுள்ள கிரீன்ஸ்டோன், இந்த கணிப்பு ஒவ்வொரு அணியின் தலைவர்களின் ஜாதக நிலையை வைத்து கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மந்த கதியில் பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம்

இம்முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடரஸ் அணிகளுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவர்கள் ஏற்கனவே வெற்றியின் கனியை இருமுறை சுவைத்து விட்டார்கள். குறித்த இரு அணியிலும் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க, யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் போன்றோர் காணப்பட்டாலும் அவர்கள் வலுவிழந்த நிலையில் உள்ளனர். இதனால் குறித்த அணிகளுக்கு அவர்களால் கூடுதலான பங்களிப்பு வழங்க முடியாது.

அவுஸ்திரேலிய அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரின் ஜாதகங்கள் ஏனைய அணித் தலைவர்களுடன் ஒப்பிடும் போதும் மிகவும் வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றன.

ரைசிங் புனே சுப்பர் ஜியண்ட் அணித் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியின் தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரின் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என கூறப்பட்டாலும் அவர்களால் வெற்றிப்பெற முடியாது.

ரைசிங் புனே சுப்பர் ஜியண்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள ஸ்டீபன் பிளெமிங், ஏற்கனே சென்னை அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த காலத்தில் வெற்றிக் கனியை சுவைத்துள்ளார். எனவே தற்போது அவர் ரைசிங் புனே சுப்பர் ஜிகாண்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருப்பதாலும் புனே அணி கிண்ணத்தை கைப்பற்றாது.

இதேவேளை, விரேந்திர செவாக் பயிற்சியாளராகவுள்ள கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி ஒப்பீட்டளவில் பலவீனமானதாக உள்ளது. எனினும் இந்த அணியின் தலைவராக இயன் மோர்கனை நியமித்திருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அதிர்ச்சி கொடுக்குமா இன்று ஆரம்பமாகும் 10ஆவது .பி.எல்?

அணித் தலைவராக இயன் மோர்கன் செயற்பட்டால் களமிறங்கும் பதினொருவர் அணியில் முரளி விஜய், ஷோன் மார்ஷ் மற்றும் டெரன் சமி ஆகியோர் இடம்பிடிக்காவிட்டாலும் அணி வெற்றி பெறும். எனினும் கிளேன் மெக்ஸ்வெல் அணியை வழிநடாத்துவதால் பஞ்சாப் அணி வெற்றி பெறாது.

இந்தாண்டு நடக்கும் 10வது ஐபிஎல் தொடரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கிரீன்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணி ஏனைய அணிகளுக்கு இம்முறை கடும் சவாலளிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கணிப்பு ஒவ்வொரு அணியின் தலைவர்களின் ஜாதக நிலையை வைத்து கணித்துள்ளதாகவும் ஒருவேளை திடீரென்று அணியில் தலைவர்கள் மாறினால், இந்த கணிப்புகளும் மாறும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.