ஆசிய நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக ஆசிய கிரிக்கட் சபையினால்நடாத்தப்படும் கிரிக்கட் தொடரே ஆசியக் கிண்ணமாகும்.
இதன் அடிப்படையில் 13வது ஆசியக் கிண்ணகிரிக்கட் போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக இருபதுக்கு இருபது வடிவில் நாளை (24)பங்களாதேஷில் ஆரம்பாமகவுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஐக்கியஅரபுகள் இராச்சியம் ஆகிய 5 நாடுகள் பங்குகொள்ளும் 13வது ஆசியகிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில்மொத்தமாக 11 போட்டிகள் நடைபெறவுள்ளன. பெப்ரவரி 24 முதல் மார்ச் 6 வரை நடைபெறும் ஆசியக்கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடாத்தும் பங்களாதேஷ் உலகடி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை எதிர்கொள்கிறது. நாளை மீர்பூர் ஷேர் பங்களாதேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்குஆரம்பமாகவுள்ளது.
ஐந்து முறை ஆசியக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ள இலங்கை அணி, 2016ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.
ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் வரலற்றை பற்றி அவதானித்தால்,
ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் முதன் முதலாக 1984ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. முதலாவதுஆசியக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடப்பட்டது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியிருந்தன. இதில் இந்திய அணி வெற்றிபெற்று முதலாவது ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
அதன்பிறகு 1986ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தை இறுதிப்போட்டியில்பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி தனதாக்கிக்கொண்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக 1997, 2004, 2008, 2014ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றி உள்ளது.
இதுவரையில் 5 முறை,
ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கை 6 ஆவது முறை கிண்ணத்தை சுவீகரிக்கும்முனைப்புடன் களமிறங்குகிறது.அதேபோல் இந்திய அணியும் 5 முறை ஆசியக் கிண்ணத்தைவென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசியக்கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பான பதிவுகள் மற்றும் புள்ளி விபரங்கள்