லங்கா பிரிமீயர் லீக்கில் விளையாடிவரும் முன்னணி வீரர்கள் சிலர் உபாதை மற்றும் தேசிய அணிகளின் அழைப்பு காரணமாக அடுத்துவரும் போட்டிகளை தவறவிடவுள்ளனர்.
கொழும்பு கேப்ஸ் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் உபாதையால் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
>>சாமிக்க அபாரம்; புள்ளிப்பட்டியலில் கோல் அணி தொடர்ந்து முதலிடம்
அதேநேரம் கொழும்பு அணியின் மற்றுமொரு வீரரான ஹஸன் மஹ்மூட் தேசிய அணியின் அழைப்பின் காரணமாக மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளார். இவருக்கு பதிலாக மற்றுமொரு பங்களாதேஷ் வீரரான ரிப்போன் மொண்டல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஜப்னா கிங்ஸ் அணியை பொருத்தவரை டஸ்கின் அஹ்மட் அணியில் இணையாததன் காரணமாக தவ்ஹிட் ரிடோய் அணியில் இணைக்கப்பட்டு விளையாடிவருகின்றார்.
கண்டி றோயல்ஸ் அணியிலிருந்து உபாதை காரணமாக விஷேன் ஹலம்பகே விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இலங்கை இளையோர் அணியின் வீரர் கவீஷ கமகே அணியில் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதேவேளை தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியிலிருந்து தேசிய அணியின் அழைப்பின் காரணமாக பஷல்ஹக் பரூகி நாடு திரும்பவுள்ள நிலையில், சிம்பாப்வே அணியின் தலைவர் சிக்கண்டர் ரஷா அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மற்றும் தம்புள்ள ரங்கரி மைதானங்களில் போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், கண்டி – பல்லேகலை மைதானத்தில் நாளை (28) போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















