குல்தீப் யாதவ் – ரிசப் பாண்ட் ஆகியோரை மாற்றீடு செய்யும் IPL அணிகள்

32
DC and LSG complete Pant-Kuldeep trade ahead of IPL 2027

டெல்லி கெபிடல்ஸ் மற்றும் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஆகியவை தமது குழாத்தில் காணப்படும் வீரர்களான ரிசப் பாண்ட்  மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரினை நேரடியாக மாற்றீடு (Trade) செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>மே.இ.தீவுகளுடன் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி<<

அதன்படி ரிசப் பாண்ட் 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக அதிகாரபூர்வமாக டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளதோடு இதற்காக அவருக்கு இந்திய நாணயப்படி 15 கோடி ரூபாய்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 53.08 கோடி ரூபாய்கள்) வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குல்தீப் யாதவ் இந்திய நாணயப்படி 13.5 கோடி ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 46 கோடி ரூபாய்கள்) லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் (LSG) அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐ.பி.எல் (IPL) தொடர் நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ரிசப் பாண்ட் இதன் மூலம் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். 28 வயதான அவர் IPL தொடரின் 2016 முதல் 2024 வரை ஒன்பது பருவங்களுக்கு டெல்லி அணிக்காக விளையாடி, மொத்தம் 111 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெல்லி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். மேலும் 2021 முதல் 2024 வரை 43 போட்டிகளில் அந்த அணியை தலைவராக வழிநடத்தியுள்ளார்.

முன்னதாக 2025ஆம் ஆண்டு IPL மெகா ஏலத்தில் ரிசப் பாண்ட்டை லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி வாங்கியிருந்தது. இருப்பினும் அங்கு அவர் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. இரண்டு பருவங்களிலும் முறையே 269 மற்றும் 312 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றிருந்தார். அவரது தலைமையில் லக்னோ அணி முறையே முந்தைய தொடர்களில் 7ஆவது மற்றும் 10ஆவது இடங்களைப் பிடித்து ஏமாற்றம் அளித்ததால், அவரது சிறந்த தலைவராகவும் காணப்பட்டிருக்கவில்லை.

>>சமரியின் சதத்துடன் இலங்கை அணிக்கு அபார வெற்றி<<

மறுபுறம் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ், தற்போது லக்னோ அணியில் இணைகின்றார். டெல்லி அணிக்காக 65 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 72 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கெபிடல்ஸ் அணியானது தக்கவைத்திருந்தது. இருப்பினும், 2026ஆம் ஆண்டுக்கான தொடரில் அவரது பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. குல்தீப் யாதவ் இறுதி பருவத்தில் வெறும் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<