மகளிர் வீராங்கனைகளைச் சந்தித்த இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு

1

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவானது (Cricket Transformation Committee) அண்மையில் இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம் பெற்றுள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றது. 

மும்முனை தொடருக்கான இலங்கை A குழாத்தில் சிராஸ், வியாஸ்காந்த், மாதுளன்

கிரிக்கெட் மறுசீரைமப்புக் குழுவின் தலைவர் திரு. எரான் விக்ரமரட்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய அணி, இலங்கை A  மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம் கிரிக்கெட் மறுசீரைமப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான திரு. பிரகாஷ் ஷாப்டர் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்திமுனிரொஷான் மஹாநாம மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் உரையாற்றிய  எரான் விக்ரமரட்ன, இலங்கையில் மகளிர் கிரிக்கெட் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பாராட்டினார். அத்துடன், அணியின் ஆசியக் கிண்ண வெற்றியை “இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு நிகழ்வு” என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பாராட்டிய விக்ரமரட்ன, ஆடவர் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் அதே அளவிலான கவனம், வாய்ப்புகள் மற்றும் ஆதரவு மகளிர் கிரிக்கெட்டுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய கிரிக்கெட் மறுவடிவமைப்பு குழு உழைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் .சி.சி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை தேசிய மகளிர் அணிக்கு அவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். 

அதேவேளை சிதத் வெத்திமுனி, குமார் சங்கக்கார மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோரும் வீராங்கனைகள் மத்தியில் உரையாற்றினர். மைதானத்திற்குள்ளும் வெளியேயும் வலுவான கவனத்தை செலுத்தி, எவ்வாறு வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது என்பது குறித்த பயனுள்ள அறிவுரைகளை அவர்கள் வழங்கியிருந்தனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<