இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் A அணிகள் பங்குபற்றும் உத்தியோகப்பற்றற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இலங்கை A அணிக்கும் இந்திய A அணிக்கும் இடையிலான இரண்டு உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை A அணி குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தும், ‘ஜப்னா மாலிங்க’ என்றழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளரான குகதாஸ் மாதுளனும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, குறித்த மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்திய A அணிக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை A அணியில் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ் இடம்பிடித்துள்ளார்.
இதனிடையே, அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சாருஜன் சண்முகநாதனுக்கு இலங்கை A அணியில் வாய்ப்பு வழங்காமை மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இவர் அண்மையில் நடைபெற்ற தேசிய சுப்பர் லீக் தொடரில் வெறும் 4 இன்னிங்ஸ்களில் 226 ஓட்டங்களைக் குவித்ததோடு, தொடரின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையான 145 ஓட்டங்களையும் விளாசி அசத்தியிருந்தார். ஆனால், இளம் வீரர் சாருஜன் சண்முகநாதனின் புறக்கணிப்பு முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. எது எவ்வாறாயினும், மேற்கிந்தியத் தீவுகள் வளர்ந்து வரும் அணிக்கெதிராக இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் முதல்தர தொடருக்கான இலங்கை அணியில் அவர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- மே.இ.தீவுகள் தொடருக்கான இலங்கை Emerging கிரிக்கெட் குழாம் வெளியீடு
- இலங்கை வரும் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி
- இலங்கை – நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
மறுபுறத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான நிரோஷன் டிக்வெல்லவிற்கு இலங்கை A வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒருநாள் மற்றும் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் தொடருக்கான இலங்கை A அணியின் உதவித் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வந்த சகலதுறை வீரர் சாமிக கருணாரத்னவும் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.
A அணிகளுக்கு இடையில் நடைபெறுகின்ற தொடர்களின் முக்கிய நோக்கமே தேசிய அணிக்குத் தேவையான அடுத்த தலைமுறை இளம் வீரர்களைக அடையாளம் காண்பதாகும். ஆனால், 33 வயதாகும் டிக்வெல்லவிற்குத் உதவித் தலைவர் பதவி வழங்கி மீண்டும் வாய்ப்பளிப்பதை விட, உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற 20 வயதேயான சாருஜன் போன்ற ஒரு திறமையான இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரருக்கு இந்தியா A மற்றும் ஆப்கானிஸ்தான் A போன்ற பலமான அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை வழங்கியிருக்கலாம்.
இதனிடையே, இலங்கை A அணியின் ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கான இரண்டு குழாம்களுக்கும் தலைவராக சுழல்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரரான சஹான் ஆரச்சிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை A, இந்தியா A மற்றும் ஆப்கானிஸ்தான் A ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரானது, எதிர்வரும் 2026 ஜூன் 9 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இலங்கை A மற்றும் இந்தியா A அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதன் முதலாவது போட்டி 2026 ஜூன் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஒருநாள்போட்டித்தொடருக்கானகுழாம்
சஹான்ஆரச்சிகே – (தலைவர்), நிரோஷன்டிக்வெல்ல – உபதலைவர் / விக்கெட்காப்பாளர், அவிஷ்கபெர்னாண்டோ, நுவனிந்துபெர்னாண்டோ, சதீரசமரவிக்ரம, அஹான்விக்ரமசிங்க, சாமிக்ககருணாரத்ன, வனுஜசஹான், விஜயகாந்த்வியாஸ்காந்த், மொஹமட்சிராஸ், துலாஜ்சமுதித்த, விஷேன்ஹலம்பகே, ரவிந்து பெர்னாண்டோ, சாமிக்ககுணசேகர,கருக்கசங்கீத், குகதாஸ்மாதுளன்
நான்குநாட்கள்கொண்டபோட்டித்தொடருக்கானகுழாம்
சஹான்ஆரச்சிகே – தலைவர், நிரோஷன்டிக்வெல்ல – உபதலைவர் / விக்கெட்காப்பாளர், பவந்தவீரசிங்க, சொஹான்டிலிவேரா, நுவனிந்துபெர்னாண்டோ, அஷேன்பண்டார, அஹான்விக்ரமசிங்க, ரவிந்துபெர்னாண்டோ, கவிந்துபத்திரத்ன, திலும்சுதீர, மொஹமட்சிராஸ், சாமிக்ககுணசேகர. கேஷரநுவன்த, துலாஜ்சமுதித்த, பிரவீன்மனிஷ. அசங்கமனோஜ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















