RCB அணியின் பயிற்சியாளர் எண்டி பிளவருக்கு அபராதம்

Indian Premier League 2026

1
Andy Flower

ராய்ப்பூரில் நேற்று (10) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டியின் போது (Level 1) நடத்தை விதிகளை மீறியதற்காக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் தலைமை பயிற்சியாளர் எண்டி பிளவருக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15% அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

>>அயர்லாந்து, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான நியூசிலாந்து குழாம் வெளியீடு<<

இதன்படி எண்டி பிளவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கேட்கக்கூடிய வகையிலான அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்கிற குற்றச்சாட்டிற்கு அமைவாகவே அபராதம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிகமாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மும்பை அணியுடனான போட்டியில் RCB அணி வெற்றி இலக்கினை சேஸிங் செய்த போது 17.2ஆவது ஓவரில், பௌண்டரி ஒன்று தொடர்பில் எண்டி பிளவர் போட்டியின் நான்காவது நடுவருடன் ஆக்ரோஷமாக விவாதித்து கடுமையான வார்த்தைகளை உபயோகம் செய்தமைக்காக அபராதம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்காவது நடுவரிடம் ஆக்ரோஷமாகப் வார்த்தைகளை பரிமாறியமைக்கான குற்றத்தை எண்டி பிளவர் ஒப்புக்கொண்டிருப்பதோடு, மேலும் போட்டி மத்தியஸ்தர் அமித் ஷர்மா விதித்த தண்டனையையும் ஆட்சேபனை இன்றி ஏற்றுக்கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<