லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 2026 – ஆறாவது பருவத்திற்கான தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்களை மே மாதம் 8ஆம் திகதி முதல் பதிவு செய்ய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று அறிவித்துள்ளது.
>>ஆரோன் ஹார்டியின் சகலதுறை ஆட்டத்தால் சம்பியனாகியது பெஷாவர் சல்மி<<
இதன்படி வெளிநாட்டு வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk ஊடாக தங்களை LPL T20 தொடரிற்காக பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் இறுதி திகதியாக மே 18 அமையும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
LPL தொடரின் போட்டிகள் இம்முறை SSC – கொழும்பு, RPICS – கொழும்பு, பல்லேகல – கண்டி மற்றும் ரங்கிரி – தம்புள்ளை ஆகிய நான்கு பிரதான மைதானங்களில் நடைபெறவுள்ளன:
2026ஆம் ஆண்டுக்கான LPL தொடரானது ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தொடரில், முன்னணி சர்வதேச நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















