சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை மகளிர் அணியானது 21 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>இலங்கை கிரிக்கெட் புதிய இடைக்கால நிர்வாகத்தில் குமார் சங்கக்கார<<
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (30) சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தனர். முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம 29 பந்துகளில் 4 பௌண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 49 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சமரி அத்தபத்து 42 ஓட்டங்களில் எடுத்திருந்தார்.
பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சில் பரீஹா ரிஷ்னா, சுல்டனா காட்டூன், நஹிதா அக்தார் மற்றும் ரிது மோனி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தார்.
>>ருமேஷ் தரங்கவிற்கு இலங்கை கிரிக்கெட்டினால் ஒரு கோடி ரூபா நிதி உதவி<<
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 162 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் ஷர்மின் அக்தார் 44 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் கவீஷா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகியாக இலங்கை மகளிர் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய கவீஷா டில்ஹாரி தெரிவாகியிருந்தார். இந்த T20 தொடரின் இறுதிப் போட்டி நாளை (02) இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<






















