தாய்லாந்தின் பெங்கொக்கில் நடைபெறவுள்ள மகளிர் வளர்ந்து வரும் அணிகளுக்கான (Women’s Emerging Teams) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் நேற்று (9ஆம் திகதி) அறிவிக்கப்பட்டது. அனுஷ்கா சஞ்சீவனி தலைமையிலான இந்தக் குழாமில் 15 வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாகப் போட்டியிடும் இத்தொடர் இருபதுக்கு – 20 (வு20) வடிவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி பங்களாதேஷ், மலேசியா மற்றும் தொடரை நடத்தும் தாய்லாந்து ஆகிய அணிகளுடன் ‘B‘ (Group B) பிரிவில் இடம்பெற்றுள்ளது. மறுபுறத்தில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் ‘A‘ (Group A) பிரிவில் போட்டியிடவுள்ளன.
இப்போட்டித் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை பெப்ரவரி 14ஆம் திகதி சந்திக்கவுள்ளது.
- அயர்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை
- இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
- எசான் மாலிங்க நீக்கம்; அணியில் இணையும் வேகப்பந்துவீச்சாளர்
இதேவேளை, இறுதியாக கடந்த 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண மகளிர் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் A அணியை வீழ்த்தி இந்திய A அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்:
அனுஷ்கா சஞ்சீவனி (தலைவி), ஹன்சிமா கருணாரத்ன (உப தலைவி), ஷயனி சேனாரத்ன, சேதனா விமுக்தி, சத்யா சந்தீபனி, சச்சினி நிசன்சலா, ரஷ்மி சில்வா, அமா காஞ்சனா, மிதலி அயோத்யா, ஷஷினி கிம்ஹானி, மல்ஷா ஷேஹானி, சஞ்சனா காவிந்தி, லிஹினி அப்சரா, நெத்மி சேனாரத்ன, யசந்தி ஹேரத்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<





















