மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் ரிசாப் பாண்ட் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ஓய்விலிருந்து மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பும் டி கொக்<<
இந்தியாவிற்கு அடுத்த மாத ஆரம்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.
எனினும் இந்த தொடரில் இந்திய அணியின் பிரதான விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ரிசாப் பாண்ட் காயம் காரணமாக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசாப் பாண்ட் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது தனது இடது காலில் உபாதைக்கு முகம் கொடுத்த நிலையில் குறித்த உபாதையில் இருந்து முழுமையாக இன்னும் குணமடையாது காணப்படுவதன் காரணமாகவே, அவருக்கு மேற்கிந்திய தீவுகள் உடனான தொடரில் ஆட முடியாத நிலை உருவாகியுள்ளது.
பாண்ட்டின் பிரதியீட்டு வீரராக இந்திய அணியின் விக்கெட்காப்பாளராக துருவ் ஜூரேல் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்திய – மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் ஒக்டோபர் 02 அகமதாபாதில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















