T20 உலகக் கிண்ணம் தள்ளிப்போனால் ஐ.பி.எல் விளையாடுவோம்: வோர்னர்

115

ஐ.சி.சியின் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் தள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் தெரிவித்தார். 

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும்க்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் T20 உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது

இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் நடைபெற சாத்தியம் குறைவு

இந்த தொடர் குறித்து கடந்த வாரம் நடைபெற்ற ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதம் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் T20 உலகக் கிண்ணத் தொடர் தள்ளிவைக்கப்பட்டால், .பி.எல் போட்டிகளில் விளையாட ஆவலாக உள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்

T20 உலகக் கிண்ணத் தொடர் தள்ளிவைக்கப்பட்டு அந்த அட்டவணையில் .பி.எல் நடத்தப்பட்டால் ஏலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து அவுஸ்திரேலிய வீரர்களும் நிச்சயம் .பி.எல் போட்டிகளில் பங்கேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

“T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வாய்ப்பில்லை என்றால் அந்த காலக்கட்டத்தில் (ஒக்டோபர், நவம்பர்) அதற்குப் பதிலாக .பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் நிச்சயம் எங்களால் .பி.எல். போட்டியில் விளையாட முடியும்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை தள்ளிவைப்பது குறித்து பல்வேறு விதங்களில் பேச்சுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியையும் (மொத்தம் 16 அணிகள்) அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து பிறகு அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் சவாலான விடயம்.

அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவுஸ்திரேலியாவில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. இந்த விதிமுறைகளை நாம் பின்பற்றியாக வேண்டும். எனவே, உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து .சி.சி. எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

இதனிடையே, ஏலத்தில் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் .பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமுடன் உள்ளனர். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதித்தால் போதும். எல்லா வீரர்களும் .பி.எல். போட்டிக்கு புறப்பட்டு வந்துவிடுவார்கள்” என தெரிவித்தார்.

ஆஸி. கிரிக்கெட்டின் நிறைவேற்று அதிகாரி இராஜினாமா..!

இதேநேரம், இவ்வருட இறுதியில் இந்தியாவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான ஆயத்தம் குறித்து டேவிட் வோர்னர் கருத்து தெரிவிக்கையில்

இந்திய அணி எம்முடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் போது நாங்கள் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியை வேண்டுமென்றே கோபமூட்டும் செயலில் ஈடுபடமாட்டோம். தேவையில்லாமல் அவரை சீண்டினால் அது இன்னும் அவரை சிறப்பாக செயல்பட தூண்டும் என்பதை அறிவோம்.

ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்திய அணியை எதிர்த்து விளையாடினால் அது புதுமையான அனுபவமாக இருக்கும். அவுஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டு இந்த தொடரில் களம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்

கடந்த முறை நாங்கள் அப்படி ஒன்றும் மோசமாக விளையாடிவிடவில்லை. சிறந்த அணியால் (இந்திய அணி) தோற்கடிக்கப்பட்டோம். அவர்களது பந்துவீச்சு அபாரமாக இருந்தது.  

தற்போது இந்திய அணி சிறப்பான துடுப்பாட்ட வரிசையை கொண்டிருக்கிறது. அதேசமயம் எங்களது பந்து வீச்சாளர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு தாக்குதல் தொடுக்க தீவிரம் காட்டுவார்கள். இதை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்” என்று வோர்னர் கூறினார்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…