பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான சிங்கர்கிரிக்கட் சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டியில் புனித செபஸ்டியன் கல்லூரியைத் தோற்கடித்த நாலந்த கல்லூரி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

முதல் நாள் நிறைவின் போது விக்கட் இழப்பின்றி நான்கு ஓட்டங்களைப் பெற்றிருந்த நாலந்த கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றிக்காக மேலும் 169 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்ற லக்ஷான் காஷ்யப 72 ஓட்டங்களைக் குவித்தார். ரவீன் டி சில்வா 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

புனித செபஸ்டியன் கல்லூரியின் 172 ஓட்டங்களை இலகுவாகக் கடந்த நாலந்த அணியினர், 6 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டி நிறுத்தப்பட்டது. பந்துவீச்சில் துமித் வெல்லகே 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி 87.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் துமித் வெல்லகே 31 ஓட்டங்களையும், ஜணுஷ்க பெரேரா 21 ஓட்டங்களையும் குவித்தனர். நாலந்த அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிய ஜயோத் கல்தீரா 25 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். தமிந்து கமலசூரிய மற்றும் ரவீன் டி சில்வா தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

இதன்படி முதல் இனிங்ஸில் பெற்ற அமோக வெற்றி காரணமாக 15 வயதிற்குட்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் சாம்பியன்களாக நாலந்த கல்லூரி அணியினர் வெற்றிவாகை சூடினர்.

புனித செபஸ்டியன் கல்லூரி

முதல் இனிங்ஸ் – 172/10 (87.5) – துமித் வெல்லகே 31, ஜணுஷ்க பெரேரா 21, ஜயோத் கல்தீரா 3/25, தமிந்து கமலசூரிய 2/30, ரவீன் டி சில்வா 2/17

நாலந்த கல்லூரி

முதல் இனிங்ஸ் – 179/4 (66) – லக்ஷான் காஷ்யப 72, ரவீன் டி சில்வா 27, ஜயோத் கல்தீரா 21*, துமித் வெல்லகே 2/45

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்