முதன்முறையாக தனது சொந்த அணிக்கு திரும்பிய பொல்லார்ட்

555
Image Courtesy - ICC

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களின் ஒருவரான கிரன் பொல்லார்ட், 2019ம் ஆண்டுக்கான கரீபியன் ப்ரீமியர் லீக்கில் (CPL), ட்ரைபகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் பல முன்னணி T20 லீக் போட்டிகளை போன்று, மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரும் நடைபெற்று வருகின்றது. இம்முறை தொடர் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (08) நடைபெற்ற டெல்லி..

இந்தப் போட்டித் தொடருக்கான தங்களுடைய முதன்மை வீரராக கிரன் பொல்லார்டை ட்ரினிடட் எண்ட் டொபேகோவைச் சேர்ந்த ட்ரைபகோ நைட் ரைடர்ஸ் அணி அறிவித்துள்ளது. கிரன் பொல்லார்ட் ட்ரினிடட் எண்ட் டொபேகோவை பிறப்பிடமாக கொண்டவர் என்ற நிலையில், முதன்முறையாக தன்னுடைய சொந்த பிரதேச அணிக்காக விளையாடவுள்ளார்.

கிரன் பொல்லார்ட், இதற்கு முன்னர் நடைபெற்ற 6 பருவகாலங்களில், முதல் ஐந்து பருவகாலங்களில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடியதுடன், இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு சென். லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். அத்துடன், கடந்த 2014ம் ஆண்டு பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியை பொல்லார்ட் வழிநடத்தியிருந்ததுடன், அந்த அணி சம்பியனாகவும் தெரிவாகியிருந்தது.

அதேநேரம், கரீபியன் ப்ரீமியர் லீக்கில் மிகச்சிறந்த அணியான ட்ரைபகோ நைட் ரைடர்ஸ், மூன்று தடவைகள் இதற்கு முன்னர் சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. நடப்பு சம்பியனான இந்த அணி 2015, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் கிண்ணத்தை சுவீகரித்துள்ளதுடன், தற்போது அனுபவம் மிக்க T20 சகலதுறை வீரரை தங்களது அணியில் இணைத்துள்ளது.

கிரன் பொல்லார்ட்டை அணியில் இணைத்துள்ளமை குறித்து ட்ரைபகோ நைட் ரைடர்ஸ் அணியின் பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில், “ட்ரினிடட் எண்ட் டொபேகோவைச் சேர்ந்த மற்றுமொரு வீரரை அணியில் இணைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ட்ரினிடட்டைச் சேர்ந்த நிறைய வீரர்களை அணியில் இணைக்கும் எமது திட்டம் தொடர்ந்து வருகின்றது. பொல்லார்ட் எமது அணிக்காக மைதானத்தில் களமிறங்கும் போது, இரசிகர்களின் உற்சாகத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (07) நடைபெற்ற மும்பை…

சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த T20 வீரரான கிரன் பொல்லார்ட் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகின்றார். மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் எதிர்வரும் 12ம் திகதி விளையாடுகின்றது. இவ்வாறான, தருணத்தில் சி.பி.எல். தொடரில் தனது சொந்த அணிக்காக பொல்லார்ட் இணைக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை, அனுபம் வாய்ந்த வீரரான பொல்லாரட், இதுவரையில், 59 சர்வதேச T20I போட்டிகள் உட்பட 474 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இவர், 9,275 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 261 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<