சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை மகளிர் அணியானது 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
>>லங்கா பிரீமியர் லீக் 2026 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு
அதேநேரம் இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் வென்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (22) ராஜாஷி நகரில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்கள் பெற்றனர்.
பங்களாதேஷ் மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை அதன் தலைவி நைகர் சுல்தானா 58 ஓட்டங்களுடன் பதிவு செய்தார்.
>>PSL விதியை மீறிய தசுன் ஷானகவிற்கு ஓராண்டுத் தடை
இலங்கை மகளிர் பந்துவீச்சில் சாமரி அத்தபத்து 36 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மால்கி மாதரா, நிமாஷா மீபாகே மற்றும் இனோக்கா ரணவீர ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் குறைந்த 166 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை போட்டியின் வெற்றி இலக்கினை 38.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை அடைந்து கொண்டது.
இலங்கை மகளிரின் வெற்றியினை சிறப்பான துடுப்பாட்டம் மூலம் செய்த அணித்தலைவி சாமரி அத்தபத்து 40 ஓட்டங்களை எடுக்க, ஹர்சிதா சமரவிக்ரம 50 ஓட்டங்களையும் ஹன்சிமா கருணாரட்ன 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் நாஹிதா அக்தார் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகியாக இலங்கைத் தரப்பின் வெற்றியை சகலதுறைகளிலும் உறுதி செய்த சாமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார்.
அடுத்ததாக இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (25) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















