இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான விக்ரம் ராத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்ரம் ராத்தோர் துடுப்பாட்ட ஆலோசகர் என்ற ரீதியில் அணியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதுடன், எதிர்வரும் T20 உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலுக்காக இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
>>முதல் T20 போட்டியில் இலங்கை அணிக்கு படுதோல்வி<<
இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இலங்கை அணியுடன் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மார்ச் 10ஆம் திகதிவரை இணைந்து செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
விக்ரம் ராத்தோர் இந்திய அணியின் துடுப்பாட்டப பயிற்றுவிப்பாளராக 2019ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டுவரை செயற்பட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி IPL தொடரில் விளையாடிவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இந்த அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















