இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் தயாராக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், இலங்கைக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலும் விளையாடாத சகிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட வீரரான சகிப் அல் ஹசன் சமீபத்தில் கண் நோயால் பாதிக்கப்பட்டார், இது அவரது துடுப்பாட்டத்தையும் பெரிதும் பாதித்தது. இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான முழு தொடரிலிருந்தும் அவருக்கு ஓய்வு தேவை என அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
- சவாலான இலக்கை நோக்கி முன்னேறும் இலங்கை கிரிக்கெட் அணி
- இலங்கையைப் பலப்படுத்திய தனன்ஞய – மெண்டிஸ் ஜோடி
- தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
இதனிடையே பங்களாதேஷ் அணியின் அனுபவம் வாய்ந்த மற்றுமொரு வீரரான முஷ்பிகுர் ரஹீமும் காயம் காரணமாக இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதால், சகிப் அல் ஹசன் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவது அந்த அணிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும்.
சகிப் அல் ஹசன் இறுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி சிட்டகாங்கில் ஆரம்பமாக உள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<