T20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ்!

IPL 2024

45

சர்வதேசத்தில் நடைபெற்று வரும் T20 போட்டிகளை பொருத்தவரை அதிகூடிய வெற்றியிலக்கை அடைந்த அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது. 

IPL தொடரின் 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 261 வெற்றியிலக்கை 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்து, T20 கிரிக்கெட்டில் அதிகூடிய வெற்றியிலக்கை அடைந்த அணி என்ற+ பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுக்கொண்டது. 

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கான் அதிரடி வீரர் சேர்ப்பு

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த 259 என்ற வெற்றியிலக்கை தென்னாபிரிக்க அணி அடைந்து சாதனையை தன்வசம் வைத்திருந்தது. குறித்த இந்த சாதனையை நேற்று (26) பஞ்சாப் கிங்ஸ் அணி முறியடித்தது. 

அதுமாத்திரமின்றி இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் மொத்தமாக 42 சிக்ஸர்களை விளாசி T20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையையும் முறியடித்திருந்தன. குறித்த இந்தப் போட்டிக்கு முன்னர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குு இடையில் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 28 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தன. 

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இந்த வெற்றியிலக்கை 18.4 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடைந்தது. 

கொல்கத்தா அணி சார்பாக பில் சோல்ட் 75 (37) ஓட்டங்கள், சுனில் நரைன் 71 ஓட்டங்கள் (32) மற்றும் வெங்கடேஷ் ஐயர் 39 (23) ஓட்டங்கள் என பெற்றுக்கொண்டதுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக ஜொனி பெயார்ஸ்டோவ் 108 (48) ஓட்டங்கள், சஷாங் சிங் 68 (28) ஓட்டங்கள் மற்றும் பிரப்சிம்ரன் சிங் 54 (20) ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டிருந்தனர். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<