நியூசிலாந்து மகளிர் A அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை மகளிர் A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (12) ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் 15 மற்றும் 18ஆம் திகதிகளில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>RCB அணியின் பயிற்சியாளர் எண்டி பிளவருக்கு அபராதம்<<
இந்த தொடருக்கான 15 பேர்கொண்ட குழாத்தின் தலைவியாக சத்யா சந்தீபனி நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய மற்றும் இளையோர் மகளிர் அணிகளில் விளையாடிய வீராங்கனைகள் பலரும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அதேநேரம் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் மன்னார் 23 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய தமிழ்பேசும் சகலதுறை வீராங்கனை சதீஷ்குமார் சஜிந்தினி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
சத்யா சந்தீபனி (தலைவி), சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரத்ன, விமேக்ஷா பாலசூரிய, லிஹினி அப்சரா, லிமன்சா திலகரட்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா, ரஸ்மிகா செவ்வந்தி, பியூமி வத்சலா, ரந்தி பிரேமரத்ன, சதீஷ்குமார் சஜிந்தினி, ரஷ்மி சில்வா, சமோதி பிரபோதா, தாருக செஹானி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















