நியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது

89
©Getty image

இந்த வருடம் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி ‘ஸ்பிரிட் ஒப் கிரிக்கெட்’ (Sprit of Cricket) விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வருடம் ஜூன்ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி  கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒரு போட்டி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத போட்டியாக அது இருந்தது

இலங்கை கிரிக்கெட் விருதுகளில் மாலிங்க, திசர, சமரிக்கு அதிக விருதுகள்!

இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை ….

லீக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.  

அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தியாநியூஸிலாந்து அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டது. ஆனால் போட்டி கைவிடப்படாமல் மறுநாள் நடைபெற்றது

ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் டோனியும் இறுதிவரை போராடியும் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்கை இழந்தது.  

இதையடுத்து, ஜூலை 14ஆம் திகதி லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் உலகக் கிண்ண இறுதி மோதலில் நியூஸிலாந்துஇங்கிலாந்து அணிகள் மோதின. அதில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை எடுத்தது

இதையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி வெற்றியிலக்கை நெருங்கியது. எனினும், ஒருசில குளறுபடிகள் நடைபெற்றன. கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓட்டம் எடுக்க ஓடிய போது நியூசிலாந்து அணி வீரர் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார்

ஆனால், பந்து எதிர்பாராத விதமாக ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதற்கு ஓட்டம் மேலதிக ஏதும் கொடுக்க வேண்டுமா என்ற நிலையில் நடுவர் ஓட்டங்களுடன் பௌண்டரியும் கொடுத்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணியும் 241 ஓட்டங்களை எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து சுப்பர் ஓவர் நடைபெற்றது

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியும் ஒரு ஓவரில் 15 ஓட்டங்களே எடுக்க மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது

இரு அணிகளுக்கும் சம்பியன் பட்டத்தை பகிர்ந்தளிக்கப்படும் என அனைவரும் எண்ணிய நிலையில் அதிக பௌண்டரிகள் அடித்துள்ளதாக கூறி இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணம் வழங்கப்பட்டது

இது நியூசிலாந்து அணியினருக்கு மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இறுதி வரை மன உறுதியுடன் முழுத்திறமையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணிக்கே சம்பியன் பட்டம் கிடைத்திருக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்

இலங்கை ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு அபார வெற்றிகள்

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) T20 கிரிக்கெட் …………………..

ஆனால், நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித கவலையும் இன்றி ஏற்றுக்கொண்டனர்

இந்த ஆட்டத்திற்கு பிறகு பென் ஸ்டோக்ஸும், அந்த ஆட்டத்தின் நடுவரான குமார் தர்மனேவும் விமர்சிக்கப்பட்டனர். துடுப்பு மட்டையை குறுக்கே வைத்தது எதிர்பாராத ஓடியது தவறுதான். அதற்காக நியூஸிலாந்து அணியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என நியூஸிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, ஐ.சி.சியின் பொதுக்கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் சுப்பர் ஓவர் சமநிலையில் நிறைவுக்கு வந்தால் மற்றுமொரு சுப்பர் ஓவரை நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்கவும், பௌண்டரிகளின் எண்ணிக்கையை கைவிடவும் தீர்மானிக்கப்பட்டது. 

இந்நிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இந்த வருடத்தின் கிரிக்கெட்டின் மன உறுதி (ஸ்பிரிட் ஒப் கிரிக்கெட்) எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் மற்றும் பிபிசி செய்திச் சேவை என்பன இணைந்து வழங்கி கௌரவித்துள்ளது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் விளையாட்டுத்திறன், பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவை வெளிப்பட்டது. அந்த அணியின் வீரர்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள் என மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<