IPL தொடரில் விளையாடும்போது உபாதைக்குள்ளாகிய பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஷ்தபிசூர் ரஹ்மான் பாகிஸ்தானுக்கு எதிரான T20I தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முஷ்தபிசூர் ரஹ்மான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய பந்துவீச்சில் ஜோஷ் இங்லிஷின் பிடியெடுப்பை எடுக்க முற்பட்டிருந்தார்.
>>இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில் நியமனம்<<
இதன்போது முஷ்தபிசூர் ரஹ்மானின் பெருவிரலில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டதுடன், களத்திலிருந்து வெளியேறியிருந்தார். இந்தநிலையில் குறித்த உபாதை குணமடைய சுமார் மூன்று வார காலம் எடுக்கும் என்பதால் பாகிஸ்தான் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உபாதைக்குள்ளாகியுள்ள முஷ்தபிசூர் ரஹ்மானுக்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் கலீட் அஹ்மட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<