இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில் இருந்து விலகும் மதிவாணன் தரப்பு

119

இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள, இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக சபைத் தேர்தலில் இருந்து K. மதிவாணன் தலைமையிலான அணி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராகும் டொம் மூடி

முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகக் குழுவினை தெரிவு செய்யும் தேர்தலில் K. மதிவாணன் தலைமையிலான அணி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர், பிரதி தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட உத்தேசிக்கப்பட்டிருந்தது. 

இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு, இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரான K. மதிவாணனும், பிரதி தலைவர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பந்துல வர்ணபுரவும், செயலாளர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்கவின் சகோதரர் நிசான்த ரணதுங்கவும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமது குழு தேர்தலில் இருந்து விலகுவதனை, மதிவாணன் தலைமையிலான குழு இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உறுதி செய்துள்ளது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…