வேறு திகதியில் லங்கா ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

191

இம் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் வீரர்கள் ஏலம் வேறு திகதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்திருக்கின்றது. 

இலங்கையில் ஒத்திவைக்கப்படும் அடுத்த கிரிக்கெட் தொடர்

நாட்டில் தற்போது உருவாகியுள்ள கொவிட்-19 வைரஸ் அச்சம் பல்வேறு விளையாட்டுக்களையும் பாதித்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையும், தாம் நடாத்தி வந்த கிரிக்கெட் தொடர்களை இரத்துச் செய்திருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டே லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலமும் வேறு திகதி ஒன்றுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

Video – அஸ்வின் விடுத்த எச்சரிக்கை என்ன? | Cricket Galatta Epi 40

அதன்படி, நடைபெறாமல் போயிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு, இந்த வீரர்கள் ஏலத்தினை கருத்திற் கொண்டு நாட்டின் நிலைமைகளை  தொடர்ந்தும் காண்கணித்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<