LPL போட்டிகளை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!

Lanka Premier League 2021

364

இலங்கையில் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில், மட்டுப்படுத்தப்பட்ட அளவு ரசிகர்கள் மைதானத்துக்கு அனுமதிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்படி, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரசிகர்களை LPL போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்குள் உள்வாங்க முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷன தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

>>இலங்கையின் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறும் மே.தீவுகள்!

ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் ஒன்றுமில்லை. கிரிக்கெட்டின் ரசிகன் என்ற ரீதியில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டள்ளது என பதிவிட்டுள்ளார்.

LPL தொடர் எதிர்வரும் 5ஆம் திகதி கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. இதில், நடைபெறவுள்ள 20 லீக் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஏனைய போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

LPL தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதுடன், 24ஆம் திகதி இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<