லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பொட்ஸ்வானாவைச் சேர்ந்த ஐசாக் மக்வாலா தனிச் சுவட்டில் ஓடி போட்டியை நிறைவு செய்து மெய்வல்லுனர் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார்.

இது இவ்வாறிருக்க உணவு நஞ்சானமையினால் இரைப்பை குடல் அழற்சிக்கு உள்ளாகி வாந்தியுடனான ஒரு வகை வைரஸினால் பாதிக்கப்பட்ட பொட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த குறுந்தூர வீரர் ஐசாக் மக்வாலாவுக்கு 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டமை மெய்வல்லுனர் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தனது இறுதி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தோல்வியை சந்தித்த போல்ட்
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளியவரும்…
மெய்வல்லுனர் அரங்கில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 44இற்கு குறைவான செக்கன்களிலும், 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தை 20இற்கு குறைவான செக்கன்களிலும் நிறைவு செய்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள 30 வயதான மக்வாலா, குறித்த போட்டியில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த காலத்தையும் பதிவு செய்த வீரராக விளங்கினார்.

தோடர்ந்து ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மற்றும் வாந்தி பேதியினால் பாதிக்கப்பட்ட மக்வாலா, அதே தினத்தன்று மாலை 400 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தயாராக இருந்த போதிலும், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும், மருத்துவ அறிக்கை ஏற்பாட்டுக் குழுவினரிடம் சமர்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு அவருக்கு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டதுடன், போட்டியின் ஏற்பாட்டுக்கு குழுவினால் மைதானத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அத்துடன், 48 மணி நேரம் தனது அறையில் இருக்க வேண்டும் என்று சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் உத்தரவிட்டதால் மக்வாலாவின் 400 மீற்றர் பதக்க கனவு தகர்ந்தது.

உலக மெய்வல்லுனர் தொடரில் தொடரும் அமெரிக்காவின் ஆதிக்கம்
லண்டனில் நடைபெற்றுவருகின்ற 16ஆவது உலக …
இதனையடுத்து மக்வாலாவின் தடை குறித்து சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘‘தனது கடின உழைப்பையும், திறமையையும் ஐசக் மக்வாலா இந்த போட்டியில் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போனதற்கு சர்வதேச தடகள சம்மேளனம் மிகவும் வருந்துகிறது. எல்லா வீரர்களின் நலனையும் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு எடுத்தோம்” என்று தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து அன்றைய தினம் மாலை 6.40க்கு மழைக்கும் மத்தியில் 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தனியொரு நபராகக் கலந்துகொண்ட மக்வாலா, ரசிகர்களின் உற்சாகத்துக்கு மத்தியில் 20.20 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.
இளையோர் ஆசியக் கிண்ணத்தை இந்தியாவில் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு
இம்முறை பெங்களூரில் நடைபெறவுள்ள 19…
இதனையடுத்து 2 மணி நேரத்திற்குப் பிறகு அரையிறுதிச் சுற்றில் மீண்டும் களமிறங்கிய மக்வாலா, 20.14 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதன்படி 400 மீற்றரில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்த அவர், 200 மீற்றர் இறுதிப் போட்டியில் களமிறங்கி தனது பதக்க கனவை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மெய்வல்லுனர் அரங்கில் முதற்தடவையாக இடம்பெற்ற சம்பவமாக கருதப்படுகின்ற மக்வாலாவின் போட்டித் தடையானது, திட்டமிடப்பட்ட சதி என விளையாட்டு ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், திறமைகளுக்கு எதுவும் தடையல்ல, மன உறுதியும் விடா முயற்சியும் தான் வீரனொருவரை வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பதை மக்வாலா நிரூபித்துள்ளார். இது அனைத்து வீரர்களுக்கும் மிகப் பெரிய முன்மாதிரியாகும்.




















