இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரான T. தீலிப் மீண்டும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியுடன் இணைவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைப்பு<<
ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக செயற்பட்ட தருணத்தில் இந்திய கிரிக்கெட் பயிற்சிக் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த T. தீலிப், அதன் பின்னர் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் உடனும் இணைந்து செயற்பட்டிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே T. தீலிப்பின் பதவிக்காலம் இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக T. தீலிப்பின் பதவிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதேநேரம் தீலிப் இந்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியுடன் இணைந்து தனது பணிகளை ஆரம்பிக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இந்திய அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சியாளராக தீலப்பின் பின்னர் மாறுவார் என எதிர்பார்க்ப்பட்டிருந்த நெதர்லாந்தினைச் சேர்ந்த ரயான் டென் டஸகட்டே இந்திய அணிக்கு தொடர்ந்து உதவிப் பயிற்சியாளராக செயற்படவிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதோடு, இந்திய A அணியுடன் பயிற்சிப் போட்டி ஒன்றிலும் பங்கேற்விருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<