இங்கிலாந்தில் மேலதிக வீரராக தக்க வைக்கப்பட்டிருந்த மேலதிக வேகப்பந்துவீச்சாளரான ஹர்ஷித் ரனா, முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
மேஜர் கழக T20 தொடரின் சம்பியனாகியது கொழும்பு கிரிக்கெட் கழகம்
இந்திய – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி நகரில் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகுகின்றது.
விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலேயே வேகப்பந்துவீச்சாளரான ஹர்ஷித் ரனா இணைக்கப்பட்டுள்ள செய்தியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிலர் சிறு உபாதைகளை எதிர்கொண்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகிய நிலையில் ஹர்ஷித் ரனாவின் இணைப்பு இடம்பெற்றுள்ளது.
23 வயது நிரம்பிய ஹர்ஷித் ரனா இந்திய அணிக்காக இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கலாக, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு T20i போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<