ஐ.சி.சி. கிரிக்கட் குழுவில் மஹேல மற்றும் ட்ராவிட்

263

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராஹுல் ட்ராவிட் ஆகியோர் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே ஐ.சி.சி கிரிக்கெட் குழுவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் மேலும் 3 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டிம் மே கிரிக்கட் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவருக்குப் பதிலாக ராஹுல் ட்ராவிட்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அது போன்று  அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மார்க் டெய்லரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் இவருக்குப் பதிலாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிணங்க எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் நகரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹேல ஜயவர்தன மற்றும்  ராஹுல் ட்ராவிட்  ஆகியோர் முதல் தடவையாக கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்