அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைப்பு

Sri Lanka Cricket

21
domestic cricket

நாட்டில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்று உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மேஜர் கழகங்களுக்கிடையிலான T20 தொடர், கழகங்களுக்கிடையிலான Tier B T20 தொடர் மற்றும் ஆளுநர் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகியவை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தீர்மானத்திற்கு அமையவே இந்த 3 உள்ளூர் கிரிக்கெட் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருத்தப்பட்ட அட்டவணைகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.

>>மீள திருத்தப்பட்ட உள்ளூர் T20 போட்டி அட்டவணை அறிவிப்பு<<

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 14 அணிகள் பங்கேற்கும் மேஜர் கழக T20 தொடர் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியது. எனினும், சீரற்ற காலநிலையால் ஒத்திவைக்கப்பட்ட குறித்த தொடரானது கடந்த 25ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகியது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலான Tier B T20 தொடர் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த தொடரும் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. எவ்வாறாயினும் மறுஅட்டவணை செய்யப்பட குறித்த தொடரானது 26ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகியது.

இதேவேளை, மே 20 முதல் 24இ 2025 வரை விளையாட திட்டமிடப்பட்ட ஆளுநர் கிண்ண கிரிக்கெட் தொடரும் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டது. இந்த தொடரை மே 25ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது. எனினும், நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையில் இந்த தொடரும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<