9வது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 33ஆவது போட்டி நேற்று டில்லியில் அமைந்துள்ள பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி ஜே.பி டுமினி  தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க 36 ஓட்டங்கள் பின்னிலையில் குக்

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ்  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. டெல்லி அணி சார்பாக ஜே.பி டுமினி 32 பந்துகளில் ஒரு பவுண்டரி அடங்கலாக 34 ஓட்டங்களையும், கருன் நயிர் 23 பந்துகளில்  32 ஓட்டங்களையும், செம் பிளிங்க்ஸ் 15 பந்துகளில் 24 ஓட்டங்களையும், கார்லஸ் பரத்வையிட் மற்றும் சஞ்சு செம்சன் ஆகியோர் தலா  20 ஓட்டங்களையும் பெற்றனர். பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் ஸ்கொட் பொலண்ட் மற்றும் ரஜத் பாதியா ஆகியோர் தம்மிடையே 2 விக்கட்டுகள் வீதம் பங்கு போட்டனர்.

பதிலுக்கு 163 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று 5 பந்துகள் மீதமிருக்க  போட்டியில் டெல்லி  டேர்டெவில்ஸ் அணியை 7 விக்கட்டுகளால் தோல்வி அடையச்செய்தது.

சுப்பர்ஜையன்ட்ஸ் அணி  சார்பாகத் துடுப்பாட்டத்தில் அஜின்கியா ரஹானே ஆட்டம் இழக்காமல் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 27 பந்துகளில் 30 ஓட்டங்களையும்,  மஹேந்திர சிங்  டோனி 20 பந்துகளில் 27 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் வந்து 2 சிக்ஸர்களை விளாசிய திசர பெரேரா 5 பந்துகளில் 14 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் அஜின்கியா ரஹானே  தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்