ஷானக, சமீரவுடன் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் பானுக!

International League T20 2022

364

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இண்டெர்நெசனல் லீக் T20 (ILT20) தொடரின், டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக இலங்கை அணி வீரர்களான தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ILT20 தொடரில் விளையாடும் அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்களை அறிவித்து வருகின்றது. இந்தநிலையில், டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி 6 வெளிநாட்டு வீரர்களின் பெயர்களை இதுவரை வெளியிட்டுள்ளது.

>> நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள குமார, சீகுகே, அசலங்க!

அதன்படி இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவர் தசுன் ஷானக, துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ மற்றும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த மூன்று இலங்கை வீரர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் ரோவ்மன் பவல், பெபியன் எலன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரையும் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ILT20 தொடரை பொருத்தவரை ஒவ்வொரு அணிகளும் தலா 14 வெளிநாட்டு வீரர்களை அணிகளில் இணைத்துக்கொள்ள முடியும். அதன்படி ஏற்கனவே கல்ப் ஜயண்ட்ஸ், எம்.ஐ எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை ILT20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<