லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்

Lanka Premier League 2020 – Coverage powered by MyCola

3515

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கொழும்பு கிங்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹெர்ஷல் கிப்ஸ்!

தற்போது 41ஆவது வயதாகும் கிறிஸ் கெயில் கடந்த மாதம் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது கண்டி டஸ்கர்ஸ் அணி மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். 

அதன்படி, கிறிஸ் கெயிலின் வருகை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடவிருக்கும் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு மிகப் பெரும் பலமாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையிலேயே, அவர் தொடரிலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எனினும், கிறிஸ் கெயில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியமைக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கிறிஸ் கெயிலின் விலகல் காரணமாக கண்டி டஸ்கர்ஸ் அணி நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு இன்னும் ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியிருக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் மாற்று வீரர் ஒருவரினை தேடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதோடு மிகப் பெரிய இழப்பு ஒன்றினையும் சந்தித்திருக்கின்றது.

கடைசியாக 2020ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்த கிறிஸ் கெயில் இந்தப் பருவகாலத்தில் 7 போட்டிகளில் பங்கேற்று 288 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<