இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய குழாத்தில் இணைக்கப்பட்ட சாய் சுதர்ஷன் சனிக்கிழமைக்குள் (08) தனது அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>2025ஆம் ஆண்டுக்கான டயலொக் கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு<<
இடதுகை துடுப்பாட்டவீரரான சாய் சுதர்ஷன் பெங்களூருவில் காணப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) உடற்தகுதி நிலையத்தில் (CoE) தனது கால் உபாதைக்கான சிகிச்சைகளைப் பெற்று உடல்நிலை தேறி வருகின்றார்.
தற்போது அவர் மீண்டும் துடுப்பாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவக் குழுவின் அனுமதி கிடைத்தவுடன் ஒகஸ்ட் 8ஆம் திகதி சனிக்கிழமைக்குள் கொழும்பில் உள்ள இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இலங்கைக்கு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய டெஸ்ட் குழாத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த சாய் சுதர்ஷன் அவரின் உபாதை ஆபத்து குறித்த மருத்துவ குழுவின் அனுமதி கிடைத்த பின்னர் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் சாய் சுதர்ஷன் தாமதமாக வருகை தருவதால், இன்று (07) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள இந்திய அணி மற்றும், இலங்கை பதினொருவர் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஒகஸ்ட் 15ஆம் திகதி தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டித் தொடர் அட்டவணை
- ஒகஸ்ட் 7–9: மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி (NCC, கொழும்பு)
- ஒகஸ்ட் 15–19: முதலாவது டெஸ்ட் போட்டி (காலி)
- ஒகஸ்ட் 23–27: இரண்டாவது டெஸ்ட் போட்டி (கொழும்பு, SSC)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















