இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகியதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தினைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் நபி இந்திய டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
>>பிளே-ஓஃப் சுற்றுக்கு முன் முக்கிய வீரர்களை விடுவித்த LPL அணிகள்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பும்ரா முழுமையாகக் குணமடையாததால் அவர் இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக இணைக்கப்பட்டுள்ள 29 வயது நிரம்பிய ஆகிப் நபி, கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை பருவங்களிலும் மொத்தமாக 104 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருப்பதோடு, ஜம்மு காஷ்மீர் அணி 2025-26 பருவத்தில் தனது கன்னி ரஞ்சி கிண்ணத் தொடரினை வெல்வதற்கும் முக்கிய பங்காற்றியிருந்தார்.
அதேவேளை ஆகிப் நபி அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய A அணியிலும் இடம்பெற்று இலங்கை A அணியுடனான இரு போட்டிகள் கொண்ட முதல்தர தொடரில் மொத்தமாக 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
பும்ரா ஒருபுறமிருக்க உபாதை ஆபத்தினை சந்தித்துள்ள மற்றுமொரு வீரரான சாய் சுதர்சன் அவருக்கு வழங்கப்படும் உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்து இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் நீடிப்பார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டி ஒகஸ்ட் 15ஆம் திகதி காலி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒகஸ்ட் 23 தொடக்கம் கொழும்பு SSC மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இந்திய டெஸ்ட் குழாம்
சுப்மன் கில் (தலைவர்), K.L. ராகுல் (பிரதி தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பாண்ட், சாய் சுதர்ஷன், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஆகிப் நபி, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், டேவ்தத் படிக்கல், சாரன்ஷ் ஜெயின்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















