ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 25 பேர்கொண்ட முதற்கட்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (19) அறிவித்துள்ளது.
இன்று (19) இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழுவின் ஊடக சந்திப்பு இடம்பெற்ற போதே, இந்த குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் இலங்கை அணியில் தொடர்ச்சியாக விளையாடிவரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருசில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.
>>இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக R. ஸ்ரீதர் நியமனம்<<
இதில் டெஸ்ட் அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா மற்றும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், பானுக ராஜபக்ஷ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனினும் இளம் வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த், டிரவீன் மெதிவ் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோருக்கு இந்த குழாத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், சஹான் ஆராச்சிகே, பிரமோத் மதுசான் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்திலிருந்து, T20 உலகக்கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ குழாம் தெரிவுசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
T20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முதற்கட்ட குழாம்
தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, ஜனித் லியனகே, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மிலான் ரத்நாயக்க, நுவான் துஷார, எசான் மாலிங்க, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுசான், மதீஷ பதிரண, டில்ஷான் மதுசங்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, விஜயகாந்த் வியாஸ்காந்த், டிரவீன் மெதிவ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















