ஆஸி. அணிக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

42

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கெடுக்கும் டெஸ்ட் தொடரிற்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் பெரும் மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கமிந்து, சமரிக்கு இலங்கை கிரிக்கெட்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது  

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புதிய பருவத்திற்காக (2025-27) இரண்டு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கின்றன.   

அதன்படி இந்த டெஸ்ட் தொடரிற்கான மேற்கிந்திய தீவுகள் அணியே பல முக்கிய மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அது புதிய டெஸ்ட் தலைவர் ரொஸ்டன் சேஸினையும் பெற்றிருக்கின்றது.  

அதேநேரம் சுமார் நான்கு வருட இடைவெளியின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவரான ஷாய் ஹோப்பிற்கு கிடைத்திருக்கின்றது.  

அதேநேரம் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரோச்சிற்கு மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் ஓய்வு வழங்கப்பட்டிருக்க, பிரண்டன் கிங் இந்த தொடர் மூலம் டெஸ்ட் அறிமுகம் பெறவிருக்கின்றார்.  

அத்துடன் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் சிறந்த அடைவுகளை வெளிப்படுத்திய துடுப்பாட்ட வீரர்களான ஜோன் கேம்பல், 24 வயது நிரம்பிய கேவ்லன் அன்டர்சன் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.  

அத்துடன் 21 வயது நிரம்பிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜோஹன் லேய்ன், அன்டர்சன் பிலிப் ஆகிய வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.  

மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 25ஆம் திகதி, பார்படோஸில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மேற்கிந்திய தீவுகள் குழாம் 

ரொஸ்டன் சேஸ் (தலைவர்), ஜோமல் வார்ரிகன் (பிரதி தலைவர்), கேவ்லன் அன்டர்சன், கிரைக் ப்ராத்வைட், ஜோன் கேம்பல், கீசி கார்டி, ஜஸ்டின் கிரேவ்ஸ், ஷேய் ஹோப், டேவின் இம்லாச், அல்சாரி ஜோசேப், ஷாமர் ஜோசேப், ப்ரண்டன் கிங், ஜோஹன் லேய்ன், மிக்கைல் லூயிஸ், அன்டர்சன் பிலிப்ஸ், ஜய்டேன் சீல்ஸ்  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<