ரிஷப் பண்டிற்கு 30 இலட்சம் ரூபா அபராதம்!

Indian Premier League 2025

284
Rishabh Pant

IPL தொடரில் விளையாடிவரும் லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்டிக்கு இந்திய ரூபாயில் 30 இலட்சம் ருபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து ஓவர்களை வீசி முடிக்க தவறியதன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

>>ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக்!<<

ரிஷப் பண்ட் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர் வீச தவறியிருந்ததால் முதல் போட்டியில் 12 இலட்சம் (இந்திய ரூபாய்) மற்றும் இரண்டாவது போட்டியில் 24 இலட்சம் ரூபா அபராதங்களை செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த இந்த குற்றத்தை மூன்றாவது தடவையாக செய்துள்ள ரிஷப் பண்டிற்கு 30 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக 66 இலட்சம் ரூபாவினை ரிஷப் பண்ட் அபராதமாக செலுத்தியுள்ளார்.

இதேவேளை ரிஷப் பண்டிற்கு மாத்திரமின்றி அணி வீரர்களுக்கு தலா 12 இலட்சம் அல்லது போட்டிக்கட்டணத்தில் தலா 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<