LPL தொடர் நடைபெறவுள்ள திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Lanka Premier League 2022

325

இலங்கை கிரிக்கெட் சபையால் ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என பிரதான விளம்பரதாரர்களான IPG குழுமம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்மாதம் நடைபெறவிருந்த LPL தொடர் திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்திய அணிக்கு திரும்பும் கோஹ்லி, ராகுல்; பும்ரா நீக்கம்

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தை தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி முதல் 23ம் திகதிவரை LPL தொடர் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், LPL தொடரின் வீரர்கள் வரைவு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் வீரர்கள் வரைவு நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே வரைவில் வாங்கப்பட்ட வீரர்கள் அணிகளில் தொடர்ந்து இடம்பெற வாய்ப்புள்ளதுடன், சர்வதேச போட்டி அட்டவணையின்படி புதிய வீரர்கள் பலரும் அணிகளில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ், தம்புள்ள ஜயண்ட்ஸ், கண்டி பெல்கோன்ஸ், கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த LPL தொடரின் போட்டிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<