வரலாற்றை மாற்றும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ள இலங்கை அணி

2615
@AFP

ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், மேற்கிந்திய தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட இமாலய வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடும் இலங்கை அணி நல்ல நிலையில் காணப்படுகின்றது.

 

இரண்டாம் இன்னிங்ஸ் முன்னிலையை மேலும் அதிகரித்துள்ள மேற்கிந்திய தீவுகள்

ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது…

வெள்ளிக்கிழமை (08) இப்போட்டியின் மூன்றாம் நாளுக்கான ஆட்டம் முடிவடைந்திருந்தது. இதில், மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்சினை (414) அடுத்து தமது முதல் இன்னிங்சில் ஆடிய இலங்கை அணி 185 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றிருந்தது. பின்னர், மீண்டும் இரண்டாம் இன்னிங்சில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 131 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் கெய்ரன் பொவேல் 64 ஓட்டங்களுடனும், சேன் டோவ்ரிச் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

நேற்று (09) ஆரம்பமான போட்டியின் நான்காம் நாளில் 360 ஓட்டங்களால் இலங்கையினை விட முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை மீண்டும் தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் கடந்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சேன் டோவ்ரிச்சினை, ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே குறைவான ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. டோவ்ரிச்சின் விக்கெட்டினை லஹிரு குமார LBW முறையில் கைப்பற்றியிருந்தார்.

எனினும், புதிதாக களம்நுழைந்த அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் களத்தில் அரைச்சதம் கடந்து நின்ற கெய்ரன் பொவேலுடன் கைகோர்த்து தனது தரப்புக்கு பலம் சேர்த்தார். இவர்கள் இருவரினாலும் ஆறாம் விக்கெட்டுக்காக குறிப்பிடும் படியான இணைப்பாட்டம் ஒன்று (42) பெறப்பட்ட நிலையில் தில்ருவான் பெரேராவின் சுழலுக்கு பொவேல் இரையாகினார். அவர் ஆட்டமிழக்கும் போது, 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்திடம் இலங்கை மகளிர் அணிக்கு அதிர்ச்சித் தோல்வி

மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரில் தாய்லாந்துக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி …


கெய்ரோன் பொவேலின் விக்கெட்டினை அடுத்து குறுகிய நேர இடைவெளியில், ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டும் LBW முறையில் பறிபோனது. ரங்கன ஹேரத்தின் ஓவரில் பறிபோன இந்த விக்கெட்டுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருந்த போதிலும் அது பலன்தரவில்லை. ஒரு நாள் போட்டிகள் போன்று துடுப்பாடிய ஹோல்டர் 40 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இவ்வாறாக ஹோல்டர் மற்றும் பொவேல் ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்போடு மேற்கிந்திய தீவுகள் அணி நான்காம் நாள் ஆட்டத்துக்கான மதிய உணவு இடைவேளையின் பின்னர், 223 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக லஹிரு குமார 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகளின் இரண்டாம் இன்னிங்சின் அடிப்படையில் இலங்கை அணிக்கு ஆட்டத்தின் வெற்றி இலக்காக 453 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் எட்டப்பட்ட அதிகூடிய வெற்றி இலக்கு 418 ஓட்டங்களே என்பதனால், வரலாற்று இலக்கு ஒன்றினை நோக்கி இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோருடன் ஆரம்பித்தது.

அதிரடி ஆரம்பத்தினை வழங்கிய குசல் பெரேரா இலகுவான பிடியெடுப்பு ஒன்றினை வழங்கி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து புதிய வீரராக களம்நுழைந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் குசல் மெண்டிசுடன் இணைந்து ஓட்டங்கள் சேர்ப்பதை தொடர்ந்தார்.

எனினும், நான்காவது நாளுக்கான தேநீர் இடைவேளைக்கு பின்னர் சிறப்பான முறையில் தனது துடுப்பாட்டத்தினை தொடங்கியிருந்த தினேஷ் சந்திமால் உபாதை ஒன்றின் காரணமாக சிறிது நேரத்தில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதன் பின்னர், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து இலங்கை அணிக்கு பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினர்.

இதில் குசல் மெண்டிசினால் அவருடைய ஆறாவது டெஸ்ட் அரைச்சதமும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் மெதிவ்சிஸின் விக்கெட் ஜேசன் ஹோல்டரினால் கைப்பற்றப்பட்டிருந்தது. இதனால், மெண்டிஸ்-மெதிவ்ஸ் இடையிலான இணைப்பாட்டமும் 72 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டது. ஆட்டமிழக்கும் போது மெதிவ்ஸ் 31 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

மெதிவ்சினை அடுத்து புதிதாக வந்த ரோஷேன் சில்வா 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தாலும் பாராட்டக்கூடிய இணைப்பாட்டம் (52) ஒன்றினை குசல் மெண்டிசுடன் இணைந்து வழங்கியிருந்தார். இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு, போட்டியின் நான்காம் நாள் நிறைவில் இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்சுக்காக 3 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

 

19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதி முதல்

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்…

போட்டியில் வெற்றி பெற இலங்கை அணிக்கு இன்னும் 277 ஓட்டங்களே தேவை என்கிற நிலையில் களத்தில் குசல் மெண்டிஸ் 94 ஓட்டங்களுடனும், லஹிரு கமகே ஓட்டமேதுமின்றியும் இருக்கின்றனர். எனவே, மெண்டிசோடு நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் இருவரினை (தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல) இலங்கை அணி தனது பக்கம் வைத்திருக்கும் காரணத்தினால், ஆட்டத்தின் இன்றைய ஐந்தாவது மற்றும் இறுதி நாளில் திருப்பு முனையான முடிவு ஒன்று எட்டப்பட எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக, அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர், சன்னோன் கேப்ரியல் மற்றும் தேவேந்திர பிஸூ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாள் இன்று தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<