யாழ்ப்பாண மாவட்ட பளுத்தூக்கல் சங்கம் நடத்திய யாழ். மாவட்ட மட்ட ஆணழகன் போட்டியில்இ 75 கிலோகிராம் எடைப்பிரிவில் நியூ வேல்ட் உடற்பயிற்சி நிலையம் சார்பில் பங்கேற்ற கணேசமூர்த்தி சங்கர் கணேஸ் யாழ். மாவட்ட ஆணழகன் பட்டதை பெற்றார்.
31 இளைஞர்கள் பங்கேற்ற இப்போட்டிஇ சனிக்கிழமை (25) மாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டுஇ பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். 1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஆணழகன் போட்டி யாழ். மாவட்டத்தில் மகப் பிரபல்யமாக இடம்பெற்று வந்தது. பின்னர் போர்;ச்சூழல் காரணமாக இப்போட்டிகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு மீளவும் யாழ். மாவட்டத்தில் உடற்பயிற்சி நிலையங்கள் செயற்பட தொடங்கியபோதும்இ; பளுத்தூக்கல் போட்டிகள் மட்டுமே அதிகளவில் இடம்பெற்று வந்தன. உடற்கட்டழகு போட்டிகளுக்கான சரியான தளங்கள் அமையப்பெறவில்லை. இந்நிலையில்இ யாழ். மாவட்ட பளுத்தூக்கல் சங்கம் இந்த உடற்கட்டழகு போட்டியினை முதன் முதலில் யாழ். மாவட்ட ரீதியில் ஏற்பாடு செய்தது. இதில் 55 இல் இருந்து 85 கிலோகிராம் வரையான எடைப்பிரிவில் போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டியில் 55 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாபரநாதன் தயாநிசன்இ 60 கிலோகிராம் எடைப்பிரிவில் கணகரட்னம் டெனீஸ்இ 65 கிலோகிராம் எடைப்பிரிவில் பரமேஸ்வரன் சுபீதரன்இ 70 கிலோகிராம் எடைப்பிரிவில் ஜோன்ஞானேந்திரன் நிவிந்தன்இ 75 கிலோகிராம் எடைப்பிரிவில் கணேசமூர்த்தி சங்கர் கணேஸ்இ 80 கிலோகிராம் எடைப்பிரிவில் கந்தையா கமலதாஸ்இ 85 கிலோகிராம் எடைப்பிரிவில் விஜயபாஸ்கர் விஜயசங்கர் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.



















