சமநிலையை நோக்கி நகரும் 109ஆவது பொன் அணிகளின் சமர்?
வட மாகாண பாடசாலைகளினுடைய 109ஆவது பொன் அணிகள் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இரு அணிகளது ஆதிக்கத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.
முதல் நாளில் ஆதிக்கம் பெற்றுள்ள யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
யாழ்ப்பாண கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வரும் போது யாழ்ப்பாண கல்லூரியினை (176) அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணியானது முதல் நாள் ஆட்டநிறைவில் 40 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்பட்டிருந்தது.
பத்திரிசியார் கல்லூரி அணிக்கு நம்பிக்கை வழங்கியிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சிவநாதன் செஹான் 13 ஓட்டங்களுடனும், ஹரின் அட்ரியன் 24 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று (13) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 136 ஓட்டங்கள் பின்தங்கியவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு, முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 89 ஓட்டங்களை பகிர்ந்த சிவநாதன் செஹான் வாசுதேவன் 45 ஓட்டங்களுடன் விஷ்னுகோபனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.
அதன் பின்னர் குறுகிய இடைவெளியில் மற்றைய ஆரம்ப வீரரான ஹரின் அட்ரியனும் 42 ஓட்டங்களுடன் வாசுதேவன் விஷ்னுகோபனின் சுழலுக்கு இரையாகினார்.
இதனையடுத்து குறுகிய இடைவெளிகளில் மத்திய வரிசை வி5க்கெட்டுக்களை இழந்த யாழ். பத்திரிசியார் அணிக்கு பின்வரிசை வீரராக வந்து நம்பிக்கை வழங்கியிருந்த ஜெயரூபன் தினுலக்சன் அரைச்சதம் பெற்றுக் கொடுக்க யாழ். பத்திரிசியார் கல்லூரி அணியானது முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது.
92 ஆவது புனிதர்களின் சமர் மார்ச் 19 இல்...
முதல் நாளில் ஆதிக்கம் பெற்றுள்ள யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
வட மாகாண பாடசாலைகளான வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இடையிலான 109ஆவது பொன் அணிகளின்...
92 ஆவது புனிதர்களின் சமர் மார்ச் 19 இல் ஆரம்பம்
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாட்டின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் தனது நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு...
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கிஸ்டன்
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கேரி கிஸ்டன் நியமனம்...
முரளி திசோனின் அபார துடுப்பாட்டத்தால் யாழ். மத்தி வடக்கின் சமரில் வெற்றி
நிறைவுக்கு வந்திருக்கும் 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
அபிஜோய்சாந்த் மிரட்டல் சதம்; வெற்றிக்காக போராடும் யாழ். மத்தி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (06) நிறைவுக்கு வரும் போது, போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 248 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ். மத்தி அணியானது 36 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது. யாழ். மத்தி அணிக்கு களத்தில் இருந்து நம்பிக்கை வழங்கிய முரளி திசோன் 22 ஓட்டங்களுடனும், அய்யாத்துறை கபிஷேக் ஓட்டங்களின்றியும் காணப்பட்டிருந்தனர்.
இன்று (07) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் போட்டியின் வெற்றிக்காக 128 ஓட்டங்கள் தேவைப்பட்ட யாழ். மத்தி அணி சார்பில் முரளி திசோன் நிதானம் கலந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் T20I அணியின் தலைவர் பதவியில் இருந்து ரஷித் கான்...
அபிஜோய்சாந்த் மிரட்டல் சதம்; வெற்றிக்காக போராடும் யாழ். மத்தி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும்...
ஆப்கானிஸ்தான் T20I அணியின் தலைவர் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கம்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I அணியின் கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமை அந்த நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதில்...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜேமி சிடன்ஸ் நியமனம்
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேமி சிடன்ஸ் (Jamie Siddons) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஓராண்டுக்கு இவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த பயிற்சி அனுபவம் கொண்ட ஜேமி சிடன்ஸ், 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் தேசிய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
மூன்றாம் நிலை (Level 3) தகுதியுள்ள பயிற்சியாளரான இவர், 2015 முதல் 2020 வரை தெற்கு அவுஸ்திரேலிய (Redbacks) அணிக்கும், 2011 முதல் 2015 வரை நியூசிலாந்தின் வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் (Wellington Firebirds) அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராகச் செயற்பட்டுள்ளார்.
ஹேலி மெதிவ்ஸின் அசத்தல் சதத்துடன் மேற்கிந்திய தீவுகள் ஆறுதல் வெற்றி
மேற்கிந்திய...
119ஆவது வடக்கின் சமர்; முதல்நாளில் இரு அணிகளும் பந்துவீச்சு ஆதிக்கம்
வடமாகாண பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இடையிலான 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட்...



































