இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேமி சிடன்ஸ் (Jamie Siddons) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஓராண்டுக்கு இவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த பயிற்சி அனுபவம் கொண்ட ஜேமி சிடன்ஸ், 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் தேசிய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
மூன்றாம் நிலை (Level 3) தகுதியுள்ள பயிற்சியாளரான இவர், 2015 முதல் 2020 வரை தெற்கு அவுஸ்திரேலிய (Redbacks) அணிக்கும், 2011 முதல் 2015 வரை நியூசிலாந்தின் வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் (Wellington Firebirds) அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராகச் செயற்பட்டுள்ளார்.
ஹேலி மெதிவ்ஸின் அசத்தல் சதத்துடன் மேற்கிந்திய தீவுகள் ஆறுதல் வெற்றி
...
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நெடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் ஹொக்கி தொடரில், இலங்கை ஆடவர் ஹொக்கி அணி இவ்வாண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆசிய ஆசிய விளையாட்டு விழாவிற்கு தகுதிபெறும் அணிகளைத் தீர்மானிக்கும் நோக்கில் தாய்லாந்தில் நடைபெற்று வரும் இத்தொடரின் 'B' பிரிவில் இலங்கை அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆரம்பப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 03 - 01 என்ற கோல்கள் கணக்கிலும், பலம் வாய்ந்த பங்காளதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 03 - 02 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றி பெற்று 06 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
இதில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 03 - 01 என்ற கோல் கணக்கில் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 01 - 01 என சமநிலையில் இருந்தன. இருப்பினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கால்பகுதிகளில் அதிரடியாக விளையாடிய சைனீஸ் தாய்ப்பே வீரர்கள் மேலதிக கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.இலங்கை அணி சார்பாக நலந்த டி சில்வா 'பெனால்டி கோர்னர்' (Short Corner) மூலம் கோல் ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார்.
உலக மெய்வல்லுநர் அஞ்சலோட்டத்துக்கு தகுதி பெற்றது இலங்கை
முன்னதாக பங்களாதேஷ் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியதுடன், சர்வதேச ஹொக்கிப் போட்டியொன்றில் சுமார் 20 ஆண்டுகளின் பின்னர் பங்களாதேஷைத் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எது எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண ஹொக்கி தொடரில் சிறப்பாக விளையாடியிருந்த பங்காளதேஷ் அணி, இம்முறை ஆசிய விளையாட்டுz விழாவுக்கான தகுதிகாண் தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 'A' பிரிவில் ஓமான் முதலிடத்தையும், இந்தோனேசியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளதுடன், 'B' பிரிவில் இலங்கை முதலிடத்தையும், உஸ்பெகிஸ்தான் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. இதன்படி 9ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிகளில் இலங்கை – இந்தோனேசியா அணிகளும், ஓமான் –...