50ஆவது தேசிய விளையாட்டு விழா ஜுன் 6ஆம் திகதி முதல் ஆரம்பம்
இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் (பொன் விழா) தேசிய விளையாட்டு விழா, எதிர்வரும் டிசம்பர் 4, 5...
SABA கூடைப்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்தும் இலங்கை
இலங்கை கூடைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘FIBA U18’ ஆசியக் கிண்ணம் -சாபா தகுதிச்சுற்று 2026' (FIBA U18 Asia Cup,...
24 ஆவது முறையாகவும் விமர்சையாக ஆரம்பமாகும் DSI SUPERSPORT பாடசாலை கரப்பந்தாட்டத் தொடர்
நாடுபூராகவுமுள்ள பாடசாலை கரப்பந்தாட்ட வீரர்களைத் தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட DSI SUPERSPORT பாடசாலை கரப்பந்தாட்டத் தொடர், இம்முறை...
மல்யுத்தத்தில் தங்கம் வென்று நிபுனி வாசனா வரலாற்றுச் சாதனை
சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இன்று (29) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இலங்கை வீராங்கனை நிபுனி வாசனா தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆசிய கடற்கரை விளையாட்ட விழாவில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும் என்பதுடன், ஆசிய மட்டத்திலான மல்யுத்தப் போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், வியட்நாம் வீராங்கனை டொஆன் தி கிம் ஓவானை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து நிபுனி...
ஆசிய கடற்கரை விளையாட்டு விழா கபடியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்
சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கபடி அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நேற்று (27ஆம் திகதி) வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.
சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார் அரங்கில் தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இலங்கை வீராங்கனைகள் இந்தியாவிற்கு கடும் சவாலை அளித்தனர். முதல் பாதி நிறைவடைந்தபோது இந்தியா 20-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இருப்பினும், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 27 புள்ளிகளைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணியால் 13 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 47-31 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கபடியில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ச்சியான 6-வது முறையாகும். இப்போட்டித் தொடரில் பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.
இதனிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மதுரிகா ஹன்சமாலி செயல்பட்டதுடன், விமலேந்திரன் டிலக்சனா, ஹன்சிகா குமுதினி, கஜெந்தினி ராஜா, ப்ரியவர்ணா ராசதுரை மற்றும் ஷானிகா சுதர்ஷனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம்
ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கைக்கு...
60 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணிக்கு வெண்கலம்
சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இன்று (26) நடைபெற்ற ஆண்களுக்கான 4x60 மீற்றர் அஞ்சலோட்டப்...
ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்
சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கை...
10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம்
பத்து வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆசிய பிராந்திய வீர வீராங்கனைகள் கடற்கரை சார்ந்த விளையாட்டுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தும்...
யூரோ ஃபோர்மியுலா பகிரங்க சம்பியன்ஷிப்பில் ‘ரூக்கீ’ விருது வென்று யெவான் டேவிட் சாதனை
இலங்கையைச் சேர்ந்த இளம் கார்பந்தய நட்சத்திரமான யெவான் டேவிட், இத்தாலியின் மொன்சா காரோட்ட ஓடுபாதையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற...



































